ஊடகவியலாளர்கள் படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – இலங்கையின் இளையோர் ஊடக அமைப்பு

327 0

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை உள்ளிட்ட 126 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பங்களில் தற்போது 5 சம்பவங்கள் குறித்து மாத்திரமே விசாரணை இடம்பெறுகிறது.

அத்துடன் குறித்த ஐந்து சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும், அவர்களுக்கு உத்தரவிட்ட நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

எனவே இந்த விடயங்கள் தொடரில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று, இலங்கையின் இளையோர் ஊடக அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளது.