மஹிந்த அணியினரை சுதந்திர கட்சி தோற்கடிக்கும் – எஸ்.பி.திஸாநாயக்க

254 0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த அணியினரை தோற்கடிக்கவிருப்பதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நிதிச் செயலாளர் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் மேதினக் கூட்டம் இடம்பெற்ற கண்டி – கெட்டம்பே மைதானத்தை சுத்திகரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் தோல்வியடையாதப் போதும், வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் நீண்ட காலத்துக்கு இணைந்திருப்பது, நாட்டுக்கும் அந்த கட்சிகளுக்கும் நல்லதில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.