சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு

212 0

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரான மொஹமட் சித்திக்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, வெலிக்கடை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினால் பணச்சலவை சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது, மொஹமட் சித்திக் காரணம் குறிப்பிடப்படாமல், நீதிமன்றத்தின் அனுமதியும் இல்லாமல் இரண்டு தடவைகள் பாதுகாப்பை காரணம் காட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை என்று சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

எனினும் தாம் அவ்வாறான உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த நீதவான், சிறைச்சாலைகள் ஆணையாளரின் தேவைக்கு ஏற்பட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இன்றி குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதை தடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.