கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

233 0

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டல்காடு களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய விஷதன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றிவளைக்கப்பட்டதை தொடர்ந்து கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது கசிப்பு உற்பத்திகான மூலப்பொருளான கோடா 335 லீற்றரும் பெரல் இரண்டும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கபட்டதுடன் தப்பிச்சென்ற நபர்களை தேடும் பணி கிண்ணியா பொலிஸாரால் முடுக்கி விடப்பட்டுள்ளது.