ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணிக்கு வந்திருந்த ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பேரணியில் கலந்துகொண்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீகிரிய பகுதியை சேர்ந்த 44 வயது குறித்த நபர் பஸ் வண்டியின் மிதி பலகையில் சென்றுகொண்டிருக்கும் போது, விழுந்து பஸ்ஸின் பின் டயருக்கு சிக்குண்டு இறந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.