வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

315 0

கிளிநொச்சி, தர்மபுரி பகுதியில் வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவரை கைது செய்த வேளையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேறு சிலர் வந்து அதிகாரிகளை தாக்கி கைது செய்யப்பட நபர்களையும், மணல் ஏற்றிச்செல்ல பயன்படுத்திய டிரக்டர் வாகனத்தையும் மீட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்