ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு?

218 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஒரு தரப்பு உறுப்பினர்கள் யோசனையை ஆதரித்துள்ள நிலையில் மற்றுமொரு தரப்பினர் இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக காலி முகத் திடல் மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின், உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.