மாவட்ட புரம் நல்லிணக்கபுரத்தில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு

225 0
மாவிட்டபுரம் தேசியநல்லிணக்கபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டப்பகுதியில் நேற்றைய தினம் ஓர் வெடிக்காத நிலையிலான வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்தில்  உள்ள நல்லிணக்கபுரம் கிராமத்தினில் 100குடும்பங்கள் மீள்குடியேறி 3 மாதங்கள் ஆகின்ற நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியில் நடமாடிய இளைஞர்களால் ஓர். வெடிபொருள் அவதானிக்கப்பட்டது. இவ்வாறு அவதானிக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் உடனடியாகவே காங்கேசன்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட தகவலினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்குத் தெரியப்படுத்தியுள்ளதோடு நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதன் பிரகாரம் இன்றைய தினம் நீதிமன்றின் அனுமதி பெறப்பட்ட குறித்த பகுதியில் உள்ள வெடிபொருட்களை அகற்றுவது வேறு வெடிபொருட்களும் உண்டா ? எனவும் இன்றைய தினம் தேடுதல் மேற்கொள்ளப்படுள்ளப்படவுள்ளது.