வடக்கு மாகாண அரச திணைக்கள நிலையங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளனர். இதுவரை மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்படாத பணியாளர்கள் உரிய படிவங்கள் மூலம் பொது சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் நியமனம் பெற்ற வட மாகாண ஆளணிக்குட்பட்ட மாகாண அரச பணியாளர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்துக்கு உள்ளீர்ப்புச் செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்குமாறு மாகாணப் பொதுச் செவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றுவோரில் மாகாண உள்ளீர்ப்புக் கடிதத்தை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து மாகாண உள்ளீர்ப்புக் கடிதத்தை மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரிடம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு வடக்கு-கிழக்கு மாகாண எல்லைக்குட்பட்ட அரச திணைக்கள நிறுவனங்களில் கடமையாற்றியோர் வடக்கு- -– கிழக்கு மாகாணத்தினால் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டனர். பின்னர் வடக்கு மாகாண சபை தனித்து இயங்கத் தொடங்கிய பின்னர் பணியாளர்கள் வடக்கு மாகாண சபைக்குள் உள்ளீர்க்கப்பட்டனர்.
2007 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் வடக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களில் இட மாற்றம் பெற்றுக் கடமையாற்றும் பணியாளர்களில் சிலர் இன்னமும் மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்படவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது எனவும், இதனையடுத்து அனைத்துப் பணியாளர்களையும் வடமாகாண சேவைக்குள் உள்ளீர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.