முதலையின் வயிற்றிலிருந்து சிறுமியின் உடற்பாகங்கள் மீட்பு

226 0

முலங்நடுவ ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமியான கிம்ஹானி அனுஷிகாவினது என்று சந்தேகிக்கப்படும் உடற் பாகங்கள், முதலையில் வயிற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தாய்  தந்தை மற்றும் சிலருடன் நீராடச் சென்ற போது, வௌ்ளிக்கிழமை  காணாமற்போன சிறுமியை பிரதேசவாசிகள், கடற்படையினரின் உதவியுடன் தேடிவந்தனர். எனினும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாளுக்கு பிறகு, 11 அடி நீளமான முதலை கிராமவாசிகளால் கொல்லப்பட்டது. கொல்லபட்ட முதலையின் வயிற்றை கிழித்து பார்த்த போது, உடற்பாகங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த உடற்பாகங்கள்,   காணாமல் போன சிறுமியினுடையதாக இருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனையை திடீர் மரண விசாரணை அதிகாரி டீ.டிம்.ஜயந்த தர்மசிறி மேற்​கொண்டு வருகின்றார்.