இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 32 வௌிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.
மியர்மார் பிரஜைகள் 30 பேரும், இரு இந்தியர்களுமே, இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9 சிறுவர்கள் காணப்படுவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.