இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 32 பேர் கைது

223 0

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக  நுழைந்த  32 வௌிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.

மியர்மார் பிரஜைகள் 30 பேரும்,  இரு இந்தியர்களுமே, இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9 சிறுவர்கள் காணப்படுவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.