புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி

226 0

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய தடைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்பொழுது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், எதிர்வரும் நாட்களில் மாற்றப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பல தடவைகள் சீர்திருத்தத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் புலி உறுப்பினர்கள் 96 பேரும், பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சிங்களவர்கள் 6 பேரும் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது