இவ்வருடத்தில் முடிவடைந்த மூன்றரை மாத காலப்பகுதிக்குள் முகநுால் பகுதி தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவசர பரிவர்த்தனை தொடர்பான பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்த முறைப்பாடுகளுள் 60 வீதமானவை பெண்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 2200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
முகநூல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்புவோர் 0112-691692 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் ரொஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.