இலங்கை அகதியான 12 வயது சிறுவன் தமிழகத்தில் நீரில் மூழ்கி பலி

227 0

தமிழகம், திருச்சி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியான ரோஹிட் எனப்படும் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

த ஹிந்து ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

திருச்சியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்றபோது, நீரில் மூழ்கி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் உடலம் அரச மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கே. கே. நகர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், சுப்பரமணியபுரம் பகுதியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.