வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கைது

220 0

கம்பஹா – கிரிந்திவெல பிரதேசத்தில் ஜீப் ரக வண்டி ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட 2 பேர் கம்பஹா குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது சந்தேக நபர்கள் துப்பாக்கி ஒன்று மற்றும் 8 ரவைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 8 ஆம் திகதி இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மினுவங்கொடை மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என்பதுடன் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.