குப்பை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார்.
அறிக்கையொன்றை வௌியிட்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குப்பைகளை அகற்றுவதில், பாடசாலை மாணவர்களை செயன்முறை ரீதியாக தொடர்புபடுத்திக்கொள்வது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
45 இலட்சம் மாணவர்களை இந்த வேலைத்திட்டத்திற்காக நேரடியாக தொடர்பு படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

