இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

199 0
இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கோபால் பக்லால் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இதற்கான இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான செயற்பாடுகளை இந்த குழு மேற்கொள்ளும்.