யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உந்துருளியில் கடத்தப்பட்ட குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, பல களவு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கல்கிஸ்ஸ மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற களவுச்சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 14 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 40 ஆயிரம் ரூபா பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.