புதிய அரசியலமைப்பை பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதாக குற்றச்சாட்டு

246 0

புதிய அரசியலமைப்பை , பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதை காணக்கூடியதாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியின் நிறுவனர் எஸ்.ஜே.என் செல்வநாயகம் அவர்களின் 40 வது வருட நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.