கடான – கிம்புலாபிடிய – தாகொன்ன பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று மதியம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
வெடிப்பினை தொடர்ந்து குறித்த பகுதியில் தீப் பற்றியுள்ள நிலையில் , அது தற்போதைய நிலையில ்முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.