மிருகங்களை அழிக்கக்கூடிய வெடி பொருட்களை வைத்திருந்தவர் கைது!

210 0

அனுராதபுரம் – பக்மீகம பகுதியில் 6 வெடிக்கக் கூடிய சாதனங்களை வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெடி பொருட்களை மிருகங்களை கொலை செய்வதற்காக அவர் வைத்திருந்தமை பொலிஸாரரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.