இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை

254 0

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்திய மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவ்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள்;; அத்துமீறுவதை தடுப்பது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும்.

இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புணர்வு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் வலுப்பெறும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.