கொழும்பு – கண்டி வீதியின் நெலுந்தெனிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது தெரிவித்துள்ளனர்.
சிற்றூந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளானவர்களுள் இருவர் கசகஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

