புற்றுநோய் மருந்தை அதிக விலைக்கு விற்ற மருந்தகம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

214 0

புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படும் தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பணிப்புரை விடுத்துள்ளார்.

நோயாளி ஒருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு இலட்சத்து 25,000 ரூபாவுக்கு குறித்த மருந்தை இறக்குமதி செய்துள்ள அந்த நிறுவனம், அதனை நோயாளிக்கு நான்கு இலட்சத்து 29,000 ரூபாவுக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பில், உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தெரியப்படுத்தியுள்ளார்.