கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

236 0

கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை பரீட்சை கணனியின் ஊடாக மாத்திரமே இடம்பெறும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த பரீட்சை இன்று முதல் 4 மாதங்கள் பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய கணனி மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த பரீட்சைக்காக ஒரு நாளைக்கு 320 பேர் மாத்திரமே தோற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்த முறை 22 ஆயிரத்து 888 பேர் கொரிய மொழிப் பரீட்சைக்காக தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது