களுத்துரை தாக்குதல் – மற்றுமொருவர் கைது

205 0

களுத்துரை – எதனமடுல பிரதேசத்தில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட மாவட்ட குற்ற பிரிவு அதிகாரிகள் நேற்று குறித்த சந்தேகத்திற்குரியவரை கம்பஹா – கினிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

38 வயதான அவர் மல்வதுஹிரிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளவர், முன்னர் மனித கொலை மற்றும் வாகன கொள்ளைச் சம்பவங்கள் தொடர்புபட்டவர் எனவும் இவர் முன்னாள் இராணுவ வீரர் என காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.