ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

225 0
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று மகாவலி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுல்படுத்தப்படும் மற்றும் அமுல்படுத்தப்படவுள்ள நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் கடந்த ஆண்டுகளின் மழைவீழ்ச்சி தொடர்பில் உரிய ஆய்வை மேற்கொண்டு நீர்ப்பாசன திட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானமெடுக்குமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு இதன்போது ஆலோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.