முத்தையா முரளீதரனுக்கு ஐ.சி.சியின் வாழ்நாள் சாதனையாளர் விருது

308 0

885866396சிறீலங்கா கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

குறித்த விருதைப் பெறும் முதலாவது சிறீலங்கா நாட்டவர் முத்தையா முரளீதரனேயாவார். இதன்மூலம் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் என்ற பெருமையையும், வாழ்நாள் உலக சாதனையாளர் என்ற பட்டத்தையும் முத்தையா முரளீதரன் பெறுகின்றார்.

இவருடன், அவுஸ்திரேலிய மகளிர் அணித்தலைவியான கரீன் ரோல்டன், அவ்வணியின் சக வீராங்கனை ஆதர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோச் லோக்மன் ஆகியோரும் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.