இனி தரம் 1, 2 மாணவர்களுக்கும் ஆங்கிலப் புத்தகம்

319 0

இலங்கை பாடசாலைகளில் தரம் 1, 2 இல் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புத்தகத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது வரை தரம் 3 இல் இருந்தே இவ் ஆங்கில பாட புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. சிறுவயதில் இருந்தே மாணவர்களின் கல்வியரிவை மேம்படுத்தும் நோக்கில் தரம் 1,2 இல் இருந்தே இப் புத்தகங்களை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வியமைச்சின் ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழி தொடர்பிலான பிரிவின் அதிகாரிகளுக்கு, கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.