முசம்மிலின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டது.

324 0

1467876280_6929527_hirunews_Mohammed-Muzammil-300x170தேசிய சுதந்திர முன்னனியில் ஊடக பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹாமட் முசம்மிலை எதிர்வரும் 10ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நிதிவான் முன்னிலையில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறையற்ற வகையில்  பயன்படுத்தியதன் ஊடாக 62 லட்சம் ரூபா அரசாங்க பணத்தை விரையம் செய்தமை அவர் மீர் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.