திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு

284 0

திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் பிரதிநிதிகள் நிதியமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின்போத இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் வருகை இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள குப்பபைகள் அகற்றுவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.