களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு…(காணொளி)

264 0

களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் அடுத்த வாரம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குழுவின் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அச்சிடப்பட உள்ளதாகவும் அக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இவ் அறிக்கை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் கையளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பிரபல பாதாள உலக குழு தலைவனான சமயங் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் ரூமி மர்சூக் தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.