புதுவருடத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியாவில் நடைபெற்றன.
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில், வுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார ஆண்,பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடனும், வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்புடனும் போட்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் புதுவருடத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவரும் சைக்கிள் ஓட்டப்போட்டியும் இன்று காலை வவுனியா நகரசபைக்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.