தெஹிவளையில் மனைவியை அடித்தே கொன்ற கணவன்

220 0

தெஹிவளையில் பெண் ஒருவரை அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த யுவதியின் தலையில் அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, படுகாயடைந்த 35 வயதான அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.