மீதொடமுல்லைக்காக பாராளுமன்ற அவசர அமர்வு இல்லை- சபாநாயகர்

225 0

மீதொடமுல்லவுக்காக அவசர பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்பட மாட்டாதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை பாராளுமன்றத்தில் நடாத்துமாறு கூட்டு எதிர்க் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து சபாநாயகரிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தினேஷ் எம்.பி. விடுத்த வேண்டுகோள்  தொடர்பில் பிரதமருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுவரை எந்தவித அறிவித்தலும் வரவில்லை எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.