பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

351 0

gemunu_w_b-415x260தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து பாதைகளில் நடத்தப்படும் இவ்வாறான பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக காவற்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பில் காவற்துறைத் தலைமையகத்தில் நேற்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முறைப்பாடு செய்திருந்தது.

இவ்வாறான பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், தங்களுக்கும் நட்டம் ஏற்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.