க.பொ.த (உ.த) வகுப்புகளுக்கு இன்றுடன் தடை

400 0

news_2006_5_images_newsSri Lanka AL Examகல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்த இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அத்துடன் மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படுதல், பரீட்சைகளுடன் தொடர்புடைய புத்தகங்கள், சுவரொட்டிகள், பதாதைகள், கையேடுகள் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும்.

இந்த உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.