ரணதுங்க குடும்பத்தாரின் ஆதரவின்றி மஹிந்தவால் அரசியல் செய்ய முடியாது : அர்ஜுன

217 0

ரணதுங்க குடும்பத்தின் உதவியின்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கம்பஹாவில் அரசியல் செய்ய முடியாது. 

எனவே அவர் தற்போதாவது ரணதுங்க குடும்பத்தாரின் முக்கியத்துவத்தினை விளங்கிக்கொண்டுள்ளமை புதுமையாகவுள்ளதென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சைத்தியவில் இடம்பெற்ற மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரெஜீ ரணதுங்கவின் 80 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.