இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் ஸ்திரமடையும் : அமைச்சர் நவீன்

227 0

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செயற்படுத்தப்பட்டால், நிரந்தரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலை குடாஓயா பிரதேசத்தில் விவசாய உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை தேயிலையின் விலை தற்போது சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.