ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு 2800 பஸ்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆதரவாளர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை நடாத்தப்படவுள்ள மே தினக் கூட்டங்களில் ஸ்ரீ ல.சு.க.யின் மே தினக் கூட்டமே மிகப் பெரிய கூட்டமாகும். இதில் தற்பொழுதே பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வதாக உடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.