நிலையான பொருளாதாரத்தை எற்படுத்த வெற்றிகரமான வேலைத்திட்டம்

234 0

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதற்கு அரசாங்கத்தினால் வெற்றிகரமான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கூறுகின்றார்.

கொத்மலே, குடாஓய பிரதேசத்தில் விவசாய உபகரணங்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் தேயிலையின் விலை சிறந்த மட்டத்தில் இருப்பதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.