சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம்

285 0

பெரண்டினா தொழில்வள நிலையத்திநூடாக வறுமையிலும் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்திய முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த எழுபத்தைந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பன வைபவம் இம்மாதம்  பதினெட்டாம் திகதி முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திலும் பத்தொன்பதாம் திகதி துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்திலும் நடைபெற்றது.

இதன்போது கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2018 ஆம் ஆண்டு தோற்றும் மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு 2018ஆம் ஆண்டு ஆடி மாதம் வரை அவர்களது  கற்றலை ஊக்குவிக்கும் முகமாக மாதாந்தம் உதவுதொகை ஒன்றையும் பெரண்டினா நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.