நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியின் மீள் திருத்த நடவடிக்கை இன்றை தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 300 மெகாவோட் மின் விநியோகத்தை தேசிய மின்சார அமைப்பில் சேர்க்க வாய்ப்புள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி இந்த மின் பிறப்பாக்கி செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.