கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு

494 0

கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை உதாசீனம் செய்து வேறு மேதின கூட்டங்களில் கலந்துக்கொள்வார்களாயின் இம்முறை பாரப்பட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில் கூட்டு எதிர் கட்சியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தாம் கொழும்பில் மே தின கூட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்தும் கட்சியின் தேசிய நிகழ்வுகளை புறக்கணிக்கும் வகையில் கூட்டு எதிர் கட்சியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் செயற்படுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறாயின் அவர்களுக்கு நிரந்தர பிரிவிற்கு அனுமதி வழங்கும் நிலை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.