திண்மக் கழிவுகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருத்தமானதொரு வேலைத்திட்டத்தை உருவாக்குக – ஜனாதிபதி

207 0

நாட்டில் காணப்படும் திண்மக் கழிவுகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பொருத்தமானதொரு வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மீதொட்டுமுல்லை குப்பை மேடு அனர்த்தம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரி ஒருவருக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.