தமிழ்-சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் ஏற்பாடு செய்யப்பட பாரம்பரிய கலை, கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் வி.தவராஜா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
புதுவருட கலை, கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய கலாச்சார விளையாட்டு நிகழ்வாக மரதன் ஓட்டம், தலையணை சமர், முட்டி உடைத்தல், வழுக்குமரம் ஏறுதல் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் பலகாரச்சந்தை என பல பாரம்பரிய கலாச்சார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.