காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 60ஆவது நாளாக நேற்றும்………. (காணொளி)

241 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டத்தை ஆரம்பித்து நேற்று அறுபதாவது நாளாகியும் அநாதைகள் போன்று வீதியில் போராடி வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்;.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று அறுபதாவது நாளை எட்டியது.

எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதி கிளிநொச்சியில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள், போக்குவரத்துச் சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் தரப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்கி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள வலுச் சேர்க்குமாறும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.