துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

230 0
பன்னலை – ஹெண்டியகல பகுதியில் நேற்று துப்பாக்கித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
காவற்துறை தகவல்படி, உயிரிழந்த நபர், நண்பர் ஒருவருடன் தேங்காய்த் தோட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்த வேளையில், அதன் காவலாளியால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவலாளி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.