பிலிப்பின்ஸில் பேரூந்து விபத்து – 25 பேர் பலி

230 0

பிலிப்பின்ஸில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 25 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் 22 பேர் காயமடைந்தனர்.

தெற்கு பிலிப்பின்ஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்து பேரூந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் பேரூந்தில் 60 பயணிகள் வரையில் இருந்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.