தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை கலைக்கப்பட்டது.

360 0

nie-415x260கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்டதன் காரணமாக தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை கலைக்கப்படுவதாக கல்வி அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நிர்வாக சபை உறுப்பினர்கள் தமது பணிகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உள்ளக தகவல்களை அடிப்படையாக கொண்டு சில உறுப்பினர்கள் செயற்படுவதன் காரணமாக தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாகம் பல சவால்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் தினங்களில் புதிய நிர்வாக சபை அமைக்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.